மாட்சிமைக்குரிய என் எஜமான் அல்லாஹ்வைப் புகழ்கிறேன்! புகழுக்குரிய அவனிடம் சிரம் தாழ்த்தி உதவி தேடுகிறேன்! அவன் கருணையைப்போற்றி என்னை மன்னிக்கக் கோருகிறேன்! என் மனத்தீமைகளிலிருந்து அவனிடம் பாதுகாப்புத்தேடுகிறேன். அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை வழிகெடுப்பவர் எவருமில்லை, அவன் எவரை வழிகேட்டில் விட்டுவிடுவானோ அவரை நேர்வழி காட்டுபவர் எவருமில்லை.
மேலும் வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்றும், அவன் தனித்தவன், அவனுக்கு இணை இல்லை என்றும் நான் சான்று பகர்கிறேன். நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனின் அடியாரும் தூதருமாவார்கள் எனவும் நான் சான்று பகர்கிறேன்.
அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள், சுஹதாக்கள், முத்தக்கீன்கள், அவர்களை உயிரிலும் மேலாக மதித்து இறுதிநாள்வரை இந்த தீனின் கொடியை தமது ஈமானிலும், பொறுமையிலும், தியாகத்திலும் நின்று உயர்த்திப்பிடிக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹ்வின் மன்னிப்பும், கருணையும், நிலையான சுவர்க்கமும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன். ஆமீன்!
பயணம் தொடரும்...